あらすじ
“சுகன்யாவுக்கு மகள் பிறந்திருக்கான்னு உனக்குத் தெரியுமில்லையா?"" ""ஆமாம், எனக்குத் தெரியும். அது ஒரு நல்ல நிகழ்வு. அதுக்காக நீ மகிழ்ச்சியடையணும்."" ""ஆனா அவளே என் துக்கத்துக்கான மூலகாரணமா இருந்தா?"" ""நீ எதைப்பத்தி பேசுற?” ""அந்த குழந்தை என்னோடதில்லை....."" எப்படி அந்த பயங்கரமான புயலடித்த இரவு, வாழ்க்கை முழுவதும் ஆறாத இரணத்தையும் சோகத்தையும் கொண்டுவந்தது? ஆதர்ச தம்பதிகளான சசாங்க்கும் சுகன்யா படேலும் மேற்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள். அவர்களது வாழ்க்கை, முதல் குழந்தையான லட்சுமி பிறக்கும்வரை அமைதியாகச் செல்கிறது. துரதிஷ்டவசத்தாலும் புரிதலின்மையாலும் அவர்கள் மனதளவில் பிரிந்து, சூழ்நிலையால் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களால் தொலைந்துபோன நேசத்தையும், அன்பான இல்வாழ்க்கையும் மீண்டும் பெறமுடியுமா? சசாங்க் மற்றும் சுகன்யாவின் மனப்போராட்டங்களை அறிந்துகொள்ள தொடருங்கள் அறிந்தும் அறியாமலும்