AJITH KUMAR - THE SILENT LEADER (BEYOND THE CINEMA) - TAMIL EDITION
VIGNESHIYAPPAN
あらすじ
ஆசிரியரின் பார்வை என் முதல் நூலான Warrior’s Mindset ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியானதைத் தொடர்ந்து, மிகுந்த உற்சாகத்துடனும், நன்றியுடனும் என் இரண்டாவது நூலான அஜித் குமார் - வையத்தலைமைகொள் (திரைக்கு அப்பால்) என்பதை இப்போது வாசகர்களின் முன் சமர்ப்பிக்கிறேன். இந்தப் புத்தகம் திரு. அஜித்குமார் அவர்கள் தன் வாழ்வில் பின்பற்றும் கொள்கைகளையும் பிறருக்கு ஊக்கமளிக்கும் அவரது பயணத்தையும் ஆராய்கிறது. திரைத்துறையில் வெற்றிகரமான நடிகராகப் பரவலாக அறியப்பட்டாலும், அஜித் அவர்கள் தனது நேர்மையாலும், ஒழுக்கத்தாலும் தான் விரும்பும் விசயங்களில் ஆர்வத்துடன் அதில் பங்குகொள்ளும் செயல்கள் மூலம் திரைக்கு அப்பாலும் பலரையும், என்னையும் சேர்த்து கவர்ந்துள்ளார். அவரது குணங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கு அப்பாற்பட்டவை; அவை தலைமைத்துவம் பற்றியும் தனியொரு நபர் எப்படி தன் வாழ்வில் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் காலத்தால் அழியாத பாடங்களை நமக்கு வழங்குகின்றன. இதுபோன்ற பண்புகளை உள்வாங்குவதன் மூலம், ஒருவர் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் சிறந்த மனிதராகவும் உருவாக முடியும் என்று நம்புகிறேன். நான் ஏன் இந்தப் புத்தகத்தை எழுதினேன் எனது பள்ளிப் பருவம் முதலே நான் அஜித்குமாரின் ரசிகன். 15 வயதிலேயே, நான் மங்காத்தா திரைப்படத்தில் அவரது திரைத்தோற்றத்தை பார்த்து ஈர்க்கப்பட்டேன். மேலும், எனது கல்லூரி நாட்களில் பில்லா 2 திரைப்படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்க ஒரு திரையரங்கிற்கு அருகில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் காத்திருந்தது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.ஆனால் காலப்போக்கில், என் ரசனை வெறும் திரைப்படங்களை ரசிப்பதில் இருந்து, அவரது குணம், விழுமியங்கள் (ஸ்ணீறீuமீs), மற்றும் மனநிலை ஆகியவற்றுடன் ஆழமாக ஒன்றிப் போகும் விதமாக முதிர்ச்சியடைந்தது. இப்போது, 30 வயதில், அந்த ரசனையை இந்தப் புத்தகமாக வெளியிடுவதில் நான் பெருமை கொள்கிறேன். சமீப காலங்களில், பல திரைப்பட இயக்குநர்கள் தங்களுக்கு விருப்பமான நட்சத்திரங்களுக்கு சினிமா மூலம் மரியாதை செலுத்தியுள்ளனர். எப்படியெனில் அந்த நடிகர்கள்களின் மீதான தங்கள் குழந்தைப்பருவ ரசனையைப் பிரதிபலிக்கும் வகையில் ரசிகர்களுக்குப் பிடித்த தருணங்களை உருவாக்கி படங்கள் எடுத்ததன் மூலம். நான் ஒரு திரைப்பட இயக்குனர் இல்லையென்றாலும், கதை சொல்வதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு முறை ஆஸ்டின் க்ளெயோன் எழுதிய "ஸ்டீல் லைக் அன் ஆர்ட்டிஸ்ட்" (Steal Like an Artist)) என்ற புத்தகத்தை நான் படித்தேன். அந்தப் புத்தகத்தில் "நீங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தை எழுதுங்கள்" (Write a book you want to read) என்ற ஒரு பகுதி உள்ளது. அதில் ”சிறந்த அறிவுரை என்னவென்றால், உங்களுக்குத் தெரிந்ததை எழுதுவது அல்ல; நீங்கள் விரும்புவதை எழுதுவதுதான்.நீங்கள் அதிகம் விரும்பும் கதையை எழுதுங்கள் , நீங்கள் படிக்க விரும்பும் கதையை எழுதுங்கள்.” என்று கூறி இருப்பார். அதன்படி இந்த நூல் எனது மனமார்ந்த படைப்பாகும். அஜித் அவர்கள் ஒருமுறை ஒரு நேர்காணலில், "வெறும் ரசிகராக இருந்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் படித்துக் கொண்டிருந்தால், கடினமாகப் படியுங்கள். உங்கள் இலக்குகளைப் பின்பற்றுங்கள். உங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்ளுங்கள்." என்று கூறினார். அந்த வலிமையான செய்தி என் மனதில் ஆழமாகப் பதிந்தது அதை இந்தப் படைப்பின் மூலம் வெளிப்படுத்த நான் விரும்பினேன். இந்தப் படைப்பின் நோக்கம்: நீங்கள் அஜித் ரசிகராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தப் புத்தகத்திலிருந்து வாசகர்கள் ஏதேனும் ஒரு அர்த்தமுள்ள விஷயத்தைக் கற்றுக்கொள்வீர்கள் என்பதே எனது நம்பிக்கை. என் பார்வையில், ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு உயிரினமும் தனக்குள் மதிப்புமிக்க ஒன்றைக் கொண்டிருக்கிறது.ஒரு புத்திசாலி நபர், நல்லதை உள்வாங்கிக் கொண்டு, மற்றவற்றை விட்டுவிட்டு, ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்கிறார், அதன் மூலம் மேம்படுகிறார். அஜித் குமார் பிரதிபலிப்பதும் அதுதான் என்று நான் நம்புகிறேன். தன்னைத்தானே ஒரு சிறந்த வடிவாக மாற்றிக்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சி. "நீங்கள் உண்மையாகவே ஒரு மாணவராக இருந்தால், எல்லா இடங்களிலும் ஒரு ஆசிரியரைக்