あらすじ
எந்தன் நூலில் மனிதனால் ஏற்படும் இயற்கை மற்றும் செயற்கை வினாக்களின் கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும் என்பதை,துணை ஆசிரியர்கள் துணையோடு கேள்வியின் பதிலை புதுவிதமாக பிரமிக்கும்படியான கவிதைகளை படைத்து அவர்களுக்குள் உள்ள கேள்விக்கு பதில் எனும் மலரின் மணங்களை அனைவரும் உணர்ந்து ரசிக்கும்படி இந்த நூலை படைக்க உதவியுள்ளனர். இந்த நூலில் உறவுகளின் அன்பான பிரிதல்,தோல்வி, இழப்பு ,வாழ்க்கை தோல்வி செல்லப்பிராணிகளின் பிரிவு,சிறு உயிர்களின் இழப்பு, காதல் வலி, உறவுகள் விட்டுச்சென்ற காரணம் போன்ற இயற்கையான பிரச்சினைகளுக்கு ஆறுதல் மொழிகளை வர்ணித்தும், இயற்கையும் நாமும் இணைந்த வாழ்வை எவ்வாறு காக்கலாம்,எவ்வாறு விடையை புரிந்து கொண்டு மேலும் ஊக்கம்பெற்று முன்னேறலாம் என்பதை கற்றுக் கொள்ளலாம்.நகர மக்கள் இந்த நூலை படித்து வாழ்வின் நல் நினைவுகளை எண்ணி மகிழ்ந்து, விடுமுறை நாட்களில் தனது கேள்விக்கு உறவுகளிடம் பதில் கேட்டு உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வாழ ஊக்குவிக்கிறது.