"இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து - எங்கே வேண்டுமானாலும் போய்,யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து, நீங்கள் அதிகம் அச்சப்படும் விஷயம் எது என்று கேட்டுப்பாருங்கள். உடனடி பதில் ‘ஜமா இஸ்லாமியா’ என்பதாக இருக்கும். ஜமாவின் பாலி குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் உலகம் முழுவது அதிர்ச்சி அலைகளை எழுப்பியவை. அல்காயிதாவின் ஆள்களை கிழக்காசியாவுக்கு வரவழைத்து அடைக்கலம் கொடுத்து, சில பயிற்சிகளையும் அளித்து மாபெரும் தாக்குதல்களுக்கு அவர்களைத் தயாரித்து அனுப்பும் அளவுக்கு வலுமிக்க இயக்கம் ஜமா. உலகம் முழுவதிலுமிருந்து இந்த இயக்கத்துக்கு நிதி வருகிறது. எங்கெங்கிருந்தோ ஆயுதங்கள் வருகின்றன. மேற்கொண்டு தேவைகளுக்கு பக்காவாக பிசினஸ் செய்கிறார்கள். முதலீடுகளை கவனிக்கத் தனிப்பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். சற்றும் புரிபடாததொரு சூட்சும் நெட் ஒர்க்கின் சூத்திரதாரியாக இருக்கிறார்கள்."