"ஆங்கில எழுத்தாளர்களில் மிகச் சிறந்தவராக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர். நடிகர், நாடக ஆசிரியர், கவிஞர் என்று பல்வேறு திறமைகள் கொண்டவர். ஆரம்பத்தில் நகைச்சுவை நாடகங்களை எழுதி, பெரும் புகழ் பெற்றார். அவருடைய இறுதிக் காலங்களில் சோகமான நாடகங்களைப் படைத்தார். நகைச்சுவையாகட்டும், துன்பமாகட்டும் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அற்புதமானவை. உலகம் முழுவதும் பெரும்பாலான மொழிகளில் மொசிபெயர்க்கப்பட்டிருக்கும் படைப்புகள் ஷேக்ஸ்பியருடையதே! உலகப் புகழ்பெற்ற பேரழகி எகிப்து ராணி கிளியோபாட்ரா. மிகச் சிறந்த வீரனாகவும் ஜூலியஸ் சீசரின் நண்பனாகவும் இருந்தவன் மார்க் ஆண்டனி. இவர்கள் இருவரின் காதலையும் நெஞ்சை உலுக்கும் விதத்தில் அற்புதமாகப் படைத்திருக்கிறார் ஆசிரியர்."